ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி!
Subscribe ராமநாதபுரம் videos
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் வசந்த காலங்களை வரவேற்கும் விதமாக வசந்த உற்சவம் ஆறாம் நாள் விழா பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது, மேலும் இரவு 8 மணி முதல் தற்போது வரை தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கன மழை பெய்தது, மழை காரணமாக கோவிலுக்குள் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் கோவிலுக்குள் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர், மேலும் கோவில் பிரகாரம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சி அளித்தது வசந்த உற்சவம் விழாவின் போது கோவில் மண்டபத்துக்குள் மழை நீர் புகுந்ததால் மழை நீரோடு சுவாமி அம்பாள் பல்லாக்கில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டது,மாதம் பல கோடி ரூபாய் வருமானம் வரும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஒரு சரியான மழை நீர் வடிகாலை அமைத்து கோவிலுக்குள் தண்ணீர் புகுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வந்திருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.