மண்டபம் கடல் பகுதியில் நாட்டுப்படகில் தங்கம் கடத்தப்பட்டதா என கடலோர காவல் படையினர் விசாரணை!
1030 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையும் இணைந்து, கடல் பகுதியில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த நாட்டுபடகை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து அதில் இருந்த 3 நபர்களிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் நாட்டுப்படகில் வந்தவர்கள் கடத்தல் தங்கம் சுமார் 25 கிலோவை கடலை போட்டு விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்டு வந்தார்களா என்று பல்வேறு கோணத்தில் கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.