திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை தேரோட்டம்!
1075 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள் கோவிலில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சைத்ரோட்சவ விழாவை முன்னிட்டு ஏப்ரல் 26 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பட்டாபிஷேக ராமர் சீதா பிராட்டியார் லட்சுமணர் ஆகியோர் தேரில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிலம்பொலி சிலம்பாட்டக் கலைக்குழு சார்பில் கட்டைக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டையுடன் தேரின் முன்பு ஆடிப்பாடி வலம் வந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த பக்தகோடிகள் தேரின் இருபுறமும் வடம் பிடித்து சுமார் ஆயிரக்கணக்கானோர் நான்கு ரத வீதியில் வலம் வந்து தேர் இருப்பு நிலைக்கு வந்தது. பின்னர் பக்தர்கள் மீது காய் கனிகள் வீசப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.