பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!
1084 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூர் கிராமத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சுவாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் கோயிலில் இருந்து தேரில் எழுந்தருளினர்.இதில் ஏராளமான பக்தர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அம்மன் சன்னதி வந்தடைந்ததும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சாமி, அம்மனை வழிபட்டனர். பூஜைகளை ஆலய ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள், வல்மீக நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.இதில் சிவகங்கை சமஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.