பாம்பன் பாலம் திறப்புக்கு காத்திருந்த மிதவை கப்பல்
1001 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ரயில் தூக்கு பாலம் இன்று கப்பல்கள் கடந்து செல்வதற்காக காலை 12 மணி அளவில் திறக்கப்பட்டது, தூக்கு பாலம் திறக்கப்பட்டதும் வடக்கிலிருந்து தெற்கு பகுதிக்கும், தெற்கிலிருந்து வடக்கு பகுதிக்கும் மீனவர்களின் கப்பல்கள் கடந்து சென்றன, மேலும் கடந்த ஒரு வார காலமாக தென்கடல் பகுதியில் காத்திருந்த மிதவைக் கப்பல்கள் இன்று தூக்கு பாலம் திறக்கப்பட்டதும் தென்கடல் பகுதியில் இருந்து தூக்கு பாலம் வழியாக வடக்கு கடல் பகுதிக்கு கடந்து சென்றது, இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாம்பன் பாலத்திலிருந்து கண்டுக்களித்தனர்.