காசோலையை கொடுத்து ஏமாற்றிய பெண்ணுக்கு 60 லட்ச ரூபாய் அபராதம் 6 மாத சிறை தண்டனை!
1015 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்தவர் ஜோதீஸ்வரி.இவர் முன்னாள் திமுக எம் பி யும்,நடிகருமான ரித்தீஷ் என்பவரின் மனைவி.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு காரைக்குடியில் உள்ள திருசெல்வம் என்பவரது நகை பட்டறையில் 60 லட்சம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கியுள்ளார்.திருசெல்வம் ஏற்கனவே ரித்தீஷ் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் நகையை பெற்றுக்கொண்டு இரண்டு மாதம் தவணை கூறிச் சென்றுள்ளார்.இரண்டு மாதம் கழித்து நகைக்கான தொகை 60 லட்சத்தை காசோலையாக கொடுத்துள்ளார்.ஆனால் ஜோதீஸ்வரியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருச்செல்வம் இதுகுறித்து 2020 ஆம் ஆண்டு காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரணை செய்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா, குற்றவாளி ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.