மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30-வது ஆண்டு தொடக்க விழா
1066 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் 30வது தொடக்க விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ராமநாதபுரத்தின் முக்கிய இடமான அரண்மனை முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை மாவட்டச் செயலாளர் வி.கே. சுரேஷ் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் கேணிக்கரை, ஓம் சக்தி நகர் மற்றும் பாரதி நகர் பகுதிகளில் உள்ள கட்சி கொடியை ஏற்றி வைத்தனர், மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் பரமக்குடி நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் மற்றும் நகர வார்டு மற்றும் மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து. கொண்டனர்.