வைகாசி திருவிழாவின் 4ம் நாள் முருகன் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளினார்
1023 views
Subscribe புதுக்கோட்டை videosவிராலிமலை முருகன் மலை கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின் நான்காம் நாள் வீதி உலா நிகழ்ச்சியில் வான வேடிக்கையுடன் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் 207 படிகள் கொண்ட இம்மலையின் மேல் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில்மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்இந்நிலையில் நிகழாண்டு வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி தினமும் முருகன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் நான்காம் நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது முன்னதாக மலைமேல் உள்ள வள்ளி, தேவசேனா சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து மலையில் இருந்து கீழே இறங்கி வந்த முருகன் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வான வேடிக்கை, மங்கள வாத்தியங்களுடன் உலா வந்த முருகனை வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கண்டு கழித்தனர்.