அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது
1114 views
Subscribe புதுக்கோட்டை videosவிராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் மற்றும் தங்கம், வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களை சேர்ந்த விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.இந்த நிலையில் இக்கோயில் உண்டியல் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.