பனை மரத்தின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து கூறும் விதமாக நுங்கு வண்டி பந்தயம்!
1082 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தில் பனை மரம் மற்றும் பணி தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாகவும் பனை மரத்தின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக சிறுவர்கள் கலந்து கொண்ட நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுடைய 60 சிறுவர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கும் முன் பனைமரம் வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. ஒரு பிரிவுக்கு 30 சிறுவர்கள் என போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் ஆதனூர் விளக்கு வரை போகவர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. போட்டி தொடங்கியவுடன் ஆர்வமாக சிறுவர்கள் சாலையில் நுங்கு வண்டி ஓட்டிச் சென்றனர். நுங்கு வண்டி போட்டியை சாலையில் இருபுறங்களிலும் நின்று ஆராவாரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.