திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன
1042 views
Subscribe புதுக்கோட்டை videosவிராலிமலையில் களை கட்டிய ஆடு, கோழிச்சந்தை.. ஊரெங்கும் திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் விற்று தீர்ந்தன.. வர்த்தகம் ஒன்றை(1.50) கோடியை தாண்டியதுபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம்.அதிலும் குறிப்பாக பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பை எடுத்துக்காட்டுவதாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளின் இறைச்சியின் ருசி அதிகமாக இருக்கும் என்பது அங்கு பரவலாக பேசப்படும் வழக்கமாகும், இதனால் இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சி கடைக்காரர்கள் கூறுகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. ஊர் பகுதி கிராம கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், கோழிகள் சந்தைக்கு விற்பனைக்கு வர தொடங்கியது இதையடுத்து வியாபாரிகள் விலை ஏற்றத்தையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ. 5 ஆயிரத்திற்கு விலை போகும் ஆடுகள் 8 ஆயிரத்திற்கும், 8 ஆயிரம் விலை போகும் ஆடுகள் 12 ஆயிரத்திற்கும், 12 ஆயிரத்திற்கு விலை போகும் ஆடுகள் 18 ஆயிரம் வரை விலை போனது விலை எவ்வளவு போனாலும் நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடா வெட்டி பூஜை செய்ய வேண்டிய நிலைமைக்கு பக்தர்கள் உள்ளதால் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளையும், கோழிகளையும் வாங்கிச் சென்றனர். காலை 7:30 மணி நிலவரப்படி ஒன்றை கோடியை தாண்டி வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.