ஸ்ரீ.திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா!
1052 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியின் முன்னதாக திரௌபதி அம்மன் பல்லாக்கில் ஊர்வலமாக வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த தீமிதி திருவிழாவிற்கு பிசானத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து புது நகர் துருசிப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மட்டங்கால் கந்தர்வகோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீ மிதித்து சுவாமி தரிசனம் செய்துவழிபட்டனர் மேலும் இவ்விழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.