கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி!
1069 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதை அடுத்து பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி ஆவணத்தான்கோட்டை அரச்குளம் ,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்