புதுக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவரை உள்ளே வைத்து பூட்டிய கிராம மக்கள்!
1064 views
சப்ஸ்கிரைப் pudukkottai வீடியோஸ்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம்.இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டியவாறு பின்புறமாக இருக்கும் வயல் மற்றும் தோட்டங்களுக்குச் செல்ல பொதுப்பாதையாக பல ஆண்டுகளாக அக்கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் திடீரென அந்த பொதுப்பாதையை அடைத்து அதில் கற்களை கொட்டி வைத்து, அந்த இடத்தில் கழிப்பறை கட்ட இருப்பதாகவும், அதனால் இனிமேல் இந்த பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பன்னீர் செல்வத்தை அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு அலுவலகத்தின் வாயிலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதையை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று உறுதியளித்து சிறை வைக்கப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தை மீட்டனர்.இந்த சம்பவத்தின் காரணமாக ஆலங்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.