பூமாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் உள்ள பூமாரியம்மன் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 26-ம்ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் - மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன.இதில் பெரிய மாடு, நடுமாடு கரிச்சான் மாடு பூஞ்சிட்டு மாடு தேன்சிட்டு மாடு பெரிய குதிரை சிறிய குதிரை என 7 பிரிவுகளாக இந்த போட்டியானது நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகளும் 50க்கும் மேற்பட்ட குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டது.இதில் இரட்டை மாட்டுவண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன.போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர் மற்றும் குதிரையின் உரிமையாளர்களுக்கு 3லட்சத்தி 35ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் வழங்கப்பட்டது.பந்தைய நிகழ்ச்சியை காண சாலையின் இரு புறமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்