இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்புதுக்கோட்டையில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசுவதில்ஆளுநர் சனாதனம் பேசுகிறார் ஆளுநர் ஆளுநர் வேலையை மட்டும் பார்த்தால் நியாயம்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி ஆளுநர் பேசுகிறார்சட்டமன்றத்திலேயே இவர் பேசும்போது தமிழகத்தில் சட்டம் கொண்டு சரி இல்லை என்று கூறி இருக்கலாமேநான்கு மாதத்திற்கு பிறகு தான் ஆளுநருக்கு ஞானம் பிறந்ததா அன்றைக்கே ஆளுநர் பேட்டி கொடுத்திருந்தால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுத்திருப்போம்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் பல தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டுள்ளதுதெலுங்கானா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல சலுகைகள் வழங்குவதாக அறிவித்த பின்னரும் தொழில் தொடங்குபவர்கள் தமிழகத்தை நோக்கி வருவது இங்கு அமைதி நிலவுவதால் தான்ஆளுநர் உரையை நிதித்துறை செயலாளர் ஆளுநர் மாளிகைக்கு சென்று விளக்கம் கொடுத்த பிறகு உரையை அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் அன்றைக்கு ஆளுநருக்கு எங்கே போயிற்று புத்தி அன்றைய தினமே அவர் மறுத்து இருந்தால் தெலுங்கானா போன்று ஆளுநரை அழைக்காமலேயே தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்துடன் தொடங்கியிருக்கும்இந்து மதத்தை சேர்ந்தவர் நம்முடைய முதல்வர் ஆகையால் இந்து மதத்தின் விழாக்களுக்கு அவர் வாழ்த்து சொன்னால் அவருடைய பிறந்த நாளுக்கு அவரே வாழ்த்து சொல்வது போன்று அர்த்தமாகும்பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்முடைய சகோதரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தான் முதலமைச்சர் பிற மதத்தின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறார்அதில் என்ன தவறு உள்ளதுஆட்சியில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் சிறு சிறு குறைகளை பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டு குறைகளை பெரிதாக ஆக்க நினைக்கின்றனர் ஆனால் அது நடக்காதுநாங்கள் எந்த தவறும் பண்ணவில்லை பண்ணப் போவதும் கிடையாது தவறு பண்ணுவதற்கு முதல்வர் விடவும் மாட்டார்