தொழிலாளர் கூட்டணி சார்பில் மே 1 உழைப்பாளர் தின விழா பேரணி!
1051 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டணி அமைப்பு சார்பில் மே 1 உழைப்பாளர் தின விழா பேரணி. பணியின் போது இறந்த தொழிலாளர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் 24 மணி நேரத்தை பிரித்து வாழ்க்கை முறை இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. அந்த வகையில் விராலிமலையில் மே 1 தின விழா பேரணி நடைபெற்றது. செக்போஸ்டில் தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக சென்று காமராஜர் நகரில் நிறைவடைந்தது. இதில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக பேரணியில் அவர்கள் பெயரை உச்சரித்து முழக்கமிட்டு சென்றனர்.