இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காணொளி காட்சி மூலம் டிஜிபி சைலேந்திரபாபு திறந்துவைத்தார்!
1091 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்பதால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர்.விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் உட்கோட்டத்தில்(சப்-டிவிஷன்) விராலிமலை, அன்னவாசல், காரையூர், இலுப்பூர் என நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. இந்த உட்கோட்டத்தில் மட்டும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இல்லாமல் இதுநாள் வரை இருந்து வந்தது.. இந்த உட்கோட்ட காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை வேண்டி புகார் கொடுக்க திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கே செல்ல வேண்டும்.இதனால் அலைச்சல் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தோடு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அப்பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர் இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒன்பது காவலர்களுடன் இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இலுப்பூர் காவல் நிலைய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.