"அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன்" - டிடிவி தினகரன் அதிரடி!
"அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன்" - டிடிவி தினகரன் அதிரடி!
60 மாதங்களில் வரவேண்டிய எதிர்ப்பு திமுக ஆட்சியின் மீது இரண்டு ஆண்டுகளிலேயே வந்துள்ளதுதற்போது நடைபெற்று கொண்டுள்ளது மக்களுக்கு எதிரான ஆட்சிஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்றுதான் நான் பார்க்கிறேன்அதிமுக பொதுச்செயலாளருக்கு நாம் அறிவுரை கூற முடியாது மக்கள் தான் சரியான அறிவுரையை கொடுக்க வேண்டும்பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது அப்போது மக்கள் முன்னேற்ற கழக நிலைபாடு தெரியும்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தல் குறித்து தன்னுடைய நிலைப்பாடு தெரிவிக்கும்ஓபிஎஸ் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை மக்கள் தான் முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர்அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது அந்த பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்டு திமுகவின் தீய ஆட்சியை விரட்டி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நத்தையை விட குறைந்த வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர்கொடைநாடு கொடை வழக்கில் பழனிச்சாமி திமுகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார் என்ற சந்தேகம் அமைந்துள்ளதுபாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டி எம் கே பைல்ஸ் விவகாரம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒரே ஒரு குடும்பத்தின் கீழ் முப்பதாயிரம் கோடி அளவிற்கு சிக்கி இருப்பதாக திமுக அமைச்சர் ஒருவரை கூறியதாக செய்திகள் வருகின்றனஇந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி12 மணி நேர வேலை சிந்தனை வந்ததே திமுகவின் ஹிட்லர் தனத்தை காட்டுகிறதுதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க திமுக ஆட்சி பழனிச்சாமி ஆட்சியை விட மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளதுஆணவத்தின் அகங்காரத்தின் உச்சியில் திமுக இருந்து கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது மக்கள் சரியான பாடம் அவர்களுக்கு புகட்டுவார்கள்.பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் நான் எடுக்கவில்லைநான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன்அதிமுகவின் பைலாவையே மாற்றிவிட்டு துரோகம் செய்துவிட்டு இன்று பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி விலைக்கு வாங்கியுள்ளார்வைத்திருந்தவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் அதற்குண்ட காலம் வரும்கூவத்தூரில் யாரையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லைஎம்எல்ஏக்கெல்லாம் ஒன்று கூடி நாங்கள் ஒன்றாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்தும் இடாக கூவத்தூரில் இறுதி நாளை தவிர அங்கே யாரும் விலை கொடுத்து நாங்கள் வாங்கவில்லை இது பொய் பிரச்சாரம்மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு பதவி போன பின்பு அதனை பயன்படுத்தி செலவு செய்து கட்சியை அபகரித்து உள்ளார் எடப்பாடி பழனிச்சாமிஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு கண்காணிப்பாளராக உதவியாக இருக்கலாமே தவிர தமிழ்நாடு திராவிட நாடுஆளுநர் கூறியது திமுக கூறிவரும் திராவிட மாடல் என்பதை குறிக்கும் என்று நான் கருதுகிறேன்நாம் பிறப்பால் திராவிடர்கள் இந்தியர்கள்திமுக திராவிடர்களை ஏமாற்றி திராவிட மாடல் என்று கூறி வருகிறது இது நமக்கு தலை முடிவாக உள்ளதுதிமுக திராவிட மாடல் என்று கூறக்கூடாது கருணாநிதி மாடல் அல்லது ஸ்டாலின் மாடல் என்று இதனால் கூறலாம்கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து படத்தை பார்த்துவிட்டு தான் நான் எந்த விதமான பதிலும் கூற முடியும் படத்தை பார்க்காமல் எதிர்ப்பாகவோ ஆதரவாகவோ நான் கூற மாட்டேன்ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் அவரை நான் கண்டிப்பாக சந்திப்பேன் அவரும் ஜெயலலிதா எம்ஜிஆரின் தொண்டர் தான்கடந்த கால தவறுகளை உணர்ந்து தற்போது துரோகத்திற்கு எதிராக ஓபிஎஸ் போராடி வருகிறார்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளதுஅமித்ஷாவை கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேட்ட கேள்விக்கு அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது அண்ணாமலையும் எடப்பாடி தான் பதில் கூற வேண்டும்திமுக அரசு மதுவால் தள்ளாடுகிறதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதுகடந்த 2016 ஆம் ஆண்டு கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் செந்தில் பாலாஜி குறித்து என்னென்ன பேசினாரோ அதையெல்லாம் தற்போது அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் பாலாஜி செய்யாமல் வெளியே வர மாட்டார்திமுகவிற்கு ஸ்லீப்பர் செல் தேவை இல்லை அனைவரும் நேரடியாக அவர்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருகின்றனர் பழனிச்சாமிக்கு தான் ஸ்லீப்பர் சன் தேவைஅமைச்சர்கள் தாதாக்கள் போன்று அடுத்த முறை பொதுமக்களை சந்தித்து வாக்குகள் பெற வாய்ப்பு இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர் சமூகநீதி என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் அவரது அமைச்சர்கள் செயல்பாடுகள் அது போன்று இல்லை என்றார்Updated: 8 May 2023, 4:37 pm