சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வினை பதிவிட்டு வருகிறார்புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட கரம்பக்குடி அடுத்த T.கலபம் பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் இளவரசன் ஒவ்வொரு முறையும் பல்வேறு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் குழந்தைகள் இளைஞர்கள் மூலம் சமூக அக்கறையுடன் வீடியோ வினை பதிவிட்டு அதனை இணையதளத்தில் பரப்பி வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் இறுதித் தேர்வு நிறைவு பெற்றதும் அவர்களது பள்ளி சீருடை இனிமேல் தேவைப்படாது என்ற நோக்கத்துடன் அதை இங்கு ஊற்றி மற்றும் கிழித்து சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மேலும் படித்து முடித்த பின்பு புத்தகங்களை பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்கு போடுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தி அதை வீடியோவாக பதிவிட்டு தற்பொழுது இணையதளத்தில் பரப்பி வருகிறார் இதனைப் பார்த்த பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிட்டத்தக்கது