ஆலங்குடி அருகே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக வாழை மரங்கள் சேதம்:விவசாயிகள் வேதனை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது இந்த மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு வானக்கன்காடு வெட்டன் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்து தரையில் கிடக்கின்றன கடந்த நான்கு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரத்தில் இந்த சூறைக்காற்றின் காரணமாக அனைத்து வாழை மரங்களும் சேதமடைந்துள்ளதால் தங்களது உழைப்பும் பொருளாதாரமும் வீணடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர் கனமழையின் போது வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி, பெரியவாடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கருக்கு மேலான வாழைமரங்கள் காற்றின் வேகத்தில் குழையுடன் ஓடிந்து நாசம். இதனால் ஓட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து விவசாயிகள் தவிப்பு இதேபோல் கருக்கா குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கருக்கு மேலான நெற்பயிர்களும் மழையால் தரையில் சாய்ந்து நாசம்.கீரமங்கலம் உள்ளிட்ட பல கிரமங்களில் சூரைக்காற்றால மா, பலா, உள்ளிட்ட மரங்களும் தரையில் சாய்த்து கிடக்கிறது.மேலும் இப்பகுதி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். வாழை மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.வேளாண்மை துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நேரில் வந்து களத்தில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.