அதிமுக விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்....புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சற்று முன் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா மீது 2021 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விஜயபாஸ்கர்க்கு சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அலுவலகங்கள் மற்றும் இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவியங்கை வாசலில் உள்ள அவரது கல் குவாரி ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போதுஇரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள் பென்டிரைவுகள் தங்கம் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.அதன் அடிப்படையில் இன்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில்புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்..லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தற்பொழுது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தற்போது தாக்கல் செய்துள்ளனர்.35 . 79 கோடி . ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்பொழுது அந்த குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.