ஆத்தியடிப்பட்டி கிராமத்திற்குள் வந்து செல்லும் அரசு நகர பேருந்து A4 தினசரி சரியான நேரத்திற்கு இயக்கப்படாததை கண்டித்தும் அப்பகுதி பெண்கள் 50கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை புதுப்பட்டி மூவர் ரோட்டில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கறம்பக்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.