பள்ளிவாசலில் ரோட்டரி சங்கம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!
1025 views
Subscribe புதுக்கோட்டை videosபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரிய பள்ளிவாசலில் ரோட்டரி சங்கம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஐந்து கடைமைகளில் ஒன்றான நோன்பு நோற்பதை 20 தினங்களுக்கு தொடர்ந்து வரக்கூடிய நிலையில் இன்னும் ஐந்து தினங்களில் நோன்பை முடித்து புனித ரமலான் பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் ரமலானை அனைவரும் இணைந்து கொண்டாடும் வகையில் தினசரி நோன்பு திறப்பு நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் சார்பில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெரிய பள்ளிவாசலில் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்க தலைவர் இராமமூர்த்தி தலைமையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் வீரப்பன் பொருளாளர் பாலு மற்றும் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் ஜாதி மத பேதமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று நோன்பினை திறந்தனர்