புதுச்சேரியில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!
1030 views
Subscribe புதுச்சேரி videosபுதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 12 மற்றும் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை நீடிக்கப்பட வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கோடை வெய்யில் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 12 வகுப்பு வரை ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.