இந்திரா காந்தி மருத்துவமனையில் செவிலியர் தினம் விழா கொண்டாட்டப்பட்டது
1025 views
Subscribe புதுச்சேரி videosஇங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பல்வேறு சேவைகளை செய்த அவரது பிறந்த நாளான மே 12ந்தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்தவகையில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் இன்று உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.இதில் செவிலியர் கண்காணிப்பாளர்கள், தலைமை செவிலியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இதில் ஏராளமான செவிலியர்கள் மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்