தங்க தேர் இழுத்து வழிபாடு நாராயணசாமி பிறந்தநாள்முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜ்பவன் வேல்முருகன் கதிர்காமம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பாபு ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி தொண்டர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை அணி தலைவர் மற்றும் நிர்வாகிகள்,பலர் கலந்து கொண்டனர்