புதுச்சேரில் திறந்திருந்த கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்!
Subscribe புதுச்சேரி videos
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியில் திறந்து இருந்த கழிவு நீர் தொட்டியில் அவ்வழியாகச் சென்ற பசு மாடு ஒன்று தவறி விழுந்து போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அவ்வாழியாக சென்ற பொது மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களால் மீட்க முடியாத நிலையில் உடனடியாக அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை போராடி மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.