புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு!
1042 views
Subscribe புதுச்சேரி videosதென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது வரை பெய்து வரும் தொடர் மழையால் புதுச்சேரி நகரப்பகுதியான ரெயின்போ நகர், சூரியகாந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளில் முட்டிகால் அளவு மழை நீர் தேங்கியதால் வாகறங்கள் நீரில் மூழ்கின. ஒருபுறம் கன மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தாலும், தொடர் மழையால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பதிக்கப்பட்டுள்ளனர்