பாரதிதாசன் திருவருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!
1126 views
Subscribe புதுச்சேரி videosபாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவுச்சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரும் பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பாரதிதாசனின் பேரனான கோ.பாரதி தனது குடும்பத்தினருடன் வந்து பாரதிதாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினார்.