ஒப்பந்த துப்புரவு தொழிலாளிக்கு பிரைவேட் நிறுவனம் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியீடு!
ஒப்பந்த துப்புரவு தொழிலாளிக்கு பிரைவேட் நிறுவனம் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியீடு!
புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் இயங்கி வருகிறது இங்கு புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகப் பகுதி மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தினம்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு வேலை செய்யும் அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் நிரந்தர பணியில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையை நிர்வாகிக்கும் பொறுப்பை தனியாரிடம் டெண்டர் மூலம் விடப்பட்டுள்ளது. சென்னை தலைமை இடமாக கொண்டுள்ள updater service private limited(UDS)இந்த நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் தினக்கூலி ஊழியர்களாக 560 நபர்களும், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என 1180 நபர்களும் பணியில் அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் குறைபாடுகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில் இந்த நிறுவனத்தை மாற்றி கடந்த 1.6.2023 முதல் மும்பை தலைமை இடமாக கொண்டுள்ள கிறிஸ்டல் ஒருங்கிணைந்த சேவைகள் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதில் ஏற்கனவே பணி ஈடுபட்டிருந்தவர்களை பணியில் அமர்த்தப்பட வேண்டும் என வாக்குறுதியுடன் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் 1180 நபர்களில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய அடையாள அட்டையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது இது குறித்து விளக்கம் கேட்டபோது. நிறுவனத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் ஏழுமலை மற்றும் வெங்கடேசன் இவர்கள் புதிய அட்டையை பெற வேண்டும் என்றால் ஒரு நபர்களுக்கு 1 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளனர் இதனை கேட்டு ஊழியர்கள் கட்டும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் இது குறித்து ஊழியர்கள் இருவரையும் தொடர்பு கொண்டு பேசியபோது தங்களுடைய வேலைக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத அளவிற்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இது சம்பந்தமாக முனுசாமி, பால பாஸ்கரன், புண்ணியகோடி ஆகியோரிடம் பேசி இருப்பதாகவும் அவர்கள் சொன்னதை நீங்கள் தாருங்கள் என்றும் கூறியுள்ளனர்.(தொலைபேசி ஆடியோ உள்ளது.)இதுகுறித்து ஜிப்மர் பாதுகாப்பு குழு தலைவர் முருகன் கூறும் பொழுது.ஜிப்மர் நிர்வாகத்தில் தொடர்ந்து ஆறு மாத காலமாக பணியில் ஈடுபட்டு வரும் ஆண்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக இருக்கும் ஏழுமலை அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இது சம்பந்தமாக ஜிப்மர் நிர்வாக இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.Updated: 8 Jun 2023, 4:06 pm