ஸ்ரீ வலம்புரி சுந்தர விநாயகர் கோவிலில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
1032 views
Subscribe புதுச்சேரி videosபுதுச்சேரி மாநிலம் வண்ரப்பேட்டை அலேன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சுந்தர விநாயகர் திருக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி முன்னதாக கடந்த 22-ஆம் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடத்தப்பட்டது. நேற்று அனைத்து விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் கால யாக பூஜை, இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு ஸ்ரீ வலம்புரி சுந்தர விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி சுந்தர விநாயகர் ஆலய நிர்வாகி குழுவினர் மற்றும் ஊர் பெரியவர்கள் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.