ஆரோவில் அருகே 10 ரூபாய் கொடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது!
1339 views
Subscribe புதுச்சேரி videosவிழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த பூத்துறை கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த தானி 56 வயது இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கடை அருகே நின்று கொண்டிருந்தபோது அமைதியாக வந்த எட்டு வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். மேலும் கடைக்கு சென்று சிறுமிக்கு 10 ரூபாய் வழங்கி பிஸ்கட் சாக்லேட் போன்ற தின்பண்டங்களை வாங்கி கொடுத்து அருகே யாரும் இல்லாத இடத்திற்கு சென்று அச்சிறுமிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் உடனே சிறுமி கூச்சலிடவே அங்கிருந்து அவர் ஓடிவிட்டார், செய்வது அறியாமல் திகைத்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறவே சிறுமியின் பெற்றோர்கள் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் அந்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர், எட்டு வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது இதற்கு காவல் அதிகாரிகள் கிராமங்கள் தோறும் பள்ளிகள் மற்றும் பாலியல் குறித்த விழிப்புணர்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.