நீட் தேர்வு விவகாரத்தில் திமுக,காங்கிரசும் அரசியல் செய்வதாக அதிமுக செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார்!
1039 views
Subscribe புதுச்சேரி videosபுதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அரசு அறிவித்த திட்டங்கள் குறித்தும் முன்னுக்குப் பின் முரனாண பொய் தகவலை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறி வருவது கண்டனத்திற்குரியது என்றும், நீட் தேர்வு என்பது முடிந்துவிட்ட ஒன்று அதை வைத்து திமுகவும் காங்கிரசும் அரசியல் செய்கின்றனர் என குற்றம்சாட்டிய அவர், நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் முதலமைச்சர் அறிவித்த சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் உதவி திட்டம், குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டங்கள் வரும் ஜூன் மாதம் புதுச்சேரி வரவுள்ள குடியரசு தலைவரை வைத்து துவக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதற்கு பிறகும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இந்த 2 திட்டங்களையும் ஏன் செயல்படுத்தவில்லை என கேட்பது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேசும் பேச்சாக உள்ளது என்றும், எனவே நாராயணசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்தார்.தொடர்ந்து பேசிய அவர், மதுபான கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை முதலில் கூறுங்கள். பிறகு வீதிக்கு வீதி மதுபான கடைகள் வைக்கக்கூடாது என்று முதலமைச்சரிடம் கூறலாம் என தெரிவித்த அன்பழகன், எந்தெந்த தொகுதியில் கஞ்சா விற்கப்படுகிறதோ அவ்வாறு விற்கப்படும் போது குற்றவாளிகள் பிடிபட்டால் அதற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் கஞ்சா விற்பனை தடுக்கப்படும் என்றும், எம்.எல்.ஏக்கள் கஞ்சா விற்பனையை தடுக்கு ஒருங்கிணைந்து போராட வேண்டும். அவ்வாறு கஞ்சா விற்பனையின் போது கைது செய்யப்படும் குற்றவாளிகளை விடுவிக்க கோரி சிபாரிசு செய்யக்கூடாது எனவும் கூறினார்.மேலும் இன்னும் எத்தனை காலம் தான் எமாற்றுவாய் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே என்ற சினிமா பாடலை பாடி நாராயணசாமியை கிண்டலடித்தார்.