புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்ட 108 மது பாட்டில்கள் பிடிபட்டது!
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக பஸ்சில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்தப்படுவதாக கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கலால் ஆய்வாளர் ஸ்ரீப்ரியா தலைமையிலான போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது பேருந்து இரண்டு பெண்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா மற்றும் பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருவண்ணாமலை செல்ல வேண்டியவர்கள் திண்டிவனம் பகுதியில் அதிக சோதனைகள் நடைபெறுவதாக தகவலையடுத்து கடலூர் வந்து அங்கிருந்து திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை திட்டமிட்ட பெண்கள் கடலூரில் சிக்கினர்puducherryTimesXP TamilUpdated: 2 Jun 2023, 1:53 pm