நீதிமன்ற உத்தரவுபடி வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட 30 வது வார்டு மதனபுரத்தில் 900 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இதில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வையாபுரி குளம் ,சிறுநாயக்கன் விவசாய சங்கங்கள் சார்பில் குளங்கரைகளில் கட்டுபட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2007 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்து இருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கோட்டாச்சியர் சிவக்குமார் ,தலைமையில் வட்டாச்சியர் பழனிசாமி ,மற்றும் பொதுப்பணிதுறையினர் , வருவாய் துறையினர் ,காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த போது மதனபுரம் பகுதிக்குள் செல்லதவாறு பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் கூறி விட்டு இதுவரை வழங்க வில்லை என குற்றாசாட்டினர். கோட்டாசியர் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.tamilnaduTimesXP TamilUpdated: 19 May 2023, 4:04 pm