வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
1041 views
Subscribe தமிழ்நாடு videosநூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பழங்குடியின மக்களை அடித்து அப்புறப்படுத்தும் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையை கண்டித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.... நீதிமன்ற உத்தரவை மீறி அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு....தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோலையனுர் கிராமத்தில் பட்டா நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக முப்பதுக்கு மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பழங்குடி இன மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்து நிலையில் நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் சர்வே எண்கள் உள்ள இடத்தை நேரில் பார்த்து அளந்து அந்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது ஆனால் மாறாக நீதிமன்ற உத்தரவை மீறி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தவறான அறிக்கையை அனுப்பி பழங்குடியின மக்களை அடித்து அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது மேலும் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களை பொய் வழக்கு போட்டும் அடித்தும் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது .இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூறு ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பழங்குடியின மக்களை அடித்து துன்புறுத்தும் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும்மீண்டும் அதே பகுதியில் விவசாயம் செய்து வாழ வழிவகை செய்ய வலியுறுத்தி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் வனத்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாநில செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.