தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை
சிவகங்கை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு 15802 மாணவர்கள் எழுதியதில் 150369 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சியின் மூலம் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் ஆறாம் இடம் பெற்றுள்ளது. சிவகங்கை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி தேவ ஏஞ்சல் நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெங 594 மொத்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் . மானாமதுரை அரசு பள்ளி மாணவி ஜனனி 592 மதிப்பெண்கள் எடுத்தும். இதேபோல் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் படித்த நிஷிந்தா என்ற மாணவி 590( MATHS-COMPUTER ) மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பள்ளிச் செயலர் A.M. சேகர் அவர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இனிப்பு மற்றும் கேடயத்தை வழங்கி பாராட்டினார். அத்துடன் தலைமை ஆசிரியர் தியாகராஜன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், சுப்பிரமணி மற்றும் சக்திவேல் அவர்களும் அம் மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். நிஷிந்தா தந்தை டிரைவர் வேலை செய்து வருகிறார் இவரது மூன்று பெண் பிள்ளைகளும் சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கதுtamilnaduTimesXP TamilUpdated: 8 May 2023, 4:22 pm