பழனி நகரில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 12 மதுபான கூடங்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்!.
1026 views
Subscribe தமிழ்நாடு videosதமிழகம் முழுவதும் சமீப காலமாக கள்ள சந்தையில் அனுமதியில் இல்லாமல் மதுபானம் விற்பனை மற்றும் கள்ளச்சாராயத்தால் இறப்புகள் தொடர்ந்தது. இதனால் தமிழக அரசு இதற்கு தீர்வு காண பல குழுக்களை அமைத்தது இந்த நிலையில் தமிழக முழுவதும் அனுமதி இல்லாமல் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வது மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.இதில் பழனி நகர் முழுவதும் சுமார் 12 பார்கள் செய்யல்பட்டு வந்ததன இந்த மதுபானக்கூடங்களில் தற்போது காலை முதல் மதியம் 12 மணி வரை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது என புகார் வந்தது. அந்த பார்கள் எந்த விதமான அனுமதியும் இன்றி ஒரு முறை கூட டெண்டர் கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக கல்ல மதுகூடங்களை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பழனி நகரில் உள்ள 12 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.இதில் பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் பழனி நகர கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் தொடந்து அனுமதி இல்லாத கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் எடுபட்டு வருகின்றனர்.