விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்ட காவல்துறை
1007 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே ஆட்டோ சென்றபோது எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் பயணித்தோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அவர்களை மீட்ட அருகில் இருந்தவர்கள் கைக்குழந்தையை வைத்திருந்த பெண்ணை மற்றும் மூதாட்டியை முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியே வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உடனடியாக தனது காரை விட்டு இறங்கி விபத்தில் சிக்கியவருக்கு தண்ணீர் கொடுத்து பரியுடன் நடந்தவற்றைக் விசாரித்தார். மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் குழந்தையை அன்போடு அரவணைத்து தூக்கி வைத்திருந்து உடனடியாக காவல்துறை ரோந்து வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயத்தோடு உடனடியாக முதலுதவி சிகிச்சைக்கி அனுப்பி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சமூக வலைத்தளங்கள் மற்றம் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.