கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை
Subscribe தமிழ்நாடு videos
பழனி அருகே கீரனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்ப்பனை அதிக அளவில் நடைபெற்று வந்துள்ளது இது சம்பந்தமாக கீரனூர் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்து வந்தனர். இந்நிலையில் கீரனூர் பகுதியில் கஞ்சா வைத்து வியாபாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அங்கு சென்று போது மூன்று இளைஞர்கள் தப்பி ஒட முயன்றனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்தது கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது உடனடியாக நவீன், பிரபாகரன் ,காளிமுத்து ,ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் அவர்கள் வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.