கொடைக்கானலில் நெகிழி கழிவுகளை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்
1049 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகள், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மலைப்பகுதிகளில், நெகிழி போத்தல்கள், நெகிழி பைகள், நெகிழி குவளைகள் உள்ளிட்ட, பதினாறு வகையான பொருட்களை, பயன்படுத்தக்கூடாது என்று, தடை பிறப்பித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அறியாத பயணிகள், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை, கொண்டு வரும்பொழுது, சோதனை சாவடிகளில், அவற்றை கைப்பற்றி, அவற்றை மறு சுழற்சி செய்யும் முறை, நகராட்சியை தொடர்ந்து, ஒன்றிய பகுதியான வில்பட்டி கிராமத்தில் பின்பற்றப்படுகிறது, பயணிகள் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை, பொடியாக்கி நொறுக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அவற்றை மறு சுழற்சி செய்யும் முறை வில்பட்டி கிராமத்தில் துவங்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, நொறுக்கி பொடியாக்கிய நெகிழி தூள்களை, சாலை அமைக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்