பவுஞ்சூர் லைன் சங்கம் மற்றும் சென்னை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
1121 views
Subscribe தமிழ்நாடு videosசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருவாதூர் கிராமத்தில் திருவாதூர் - பவுஞ்சூர் லைன் சங்கம் மற்றும் சென்னை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் லயன் சங்க தலைவர் பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது இந்த கண் சிகிச்சை முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் மதியழகன் வட்டார தலைவர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தனர் இந்த கண் சிகிச்சை முகாமில் கண்ணில் புரை கண்ணில் நீர் வடிதல் சதை வளர்ச்சி கண்ணில் நீர் அழுத்தம் உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இந்த கண் சிகிச்சை முகாமில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த கண் சிகிச்சை முகாமில் லைன்ஸ் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன் அன்பு சுரேஷ் பாபு அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.