பழனி மண்டபத்தை கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு:தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது!
1010 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கோவிலில் தொடர்ந்து இணை ஆணையர் நடராஜனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களாக பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் உள்ளூர் பக்தர்களை மலைக்கோவில் கண்காணிப்பாளர் சந்திரமோகன் என்பவர் எங்கள் கோவில் , நாங்கள் தான் அதிகாரி என்றும், உள்ளூர் பக்தர்களை தர குறைவாக பேசுவதாக கூறி இன்று காலை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் அடிவாரம், சன்னதி வீதி ,கிரிவீதி பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்து திருக்கோவில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு சந்திர மோகனையும் , இணை ஆணையர் நடராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அடுத்ததாக ஆயக்குடி பாண்டிய வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த பழனி மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தை கடந்த 2012 ம் ஆண்டு சமுதாயத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் சென்ற போது மண்டபத்தை கோவில் நிர்வாகம் பூட்டி விட்டது , மீண்டும் 2019 ஆம் ஆண்டு தீர்ப்பின் படி மண்டபத்தின் சாவியை திருக்கோவில் நிர்வாகம் எங்களிடம் ஒப்படைக்க உத்தரவின் படி கடந்த 4 ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் சாவியை ஒப்படைக்கவில்லை என்று கூறி இன்று சமுதாய மக்கள் ஒன்றிணைந்து திருக்கோவில் அலுவலகத்தை முற்றையிட்டு போராட்டம் நடத்தினர்.இன்று ஒரே நாளில் இரண்டு முறை கோவில் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.