இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்திய நெல் திருவிழா
1018 views
Subscribe தமிழ்நாடு videosசர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது, தாய்பால் சுரக்கக்கூடியது, பசியை தூண்டக்கூடியது, உடல் வலியையை வளர்க்கக்கூடியது, சுகபிரசவத்திற்கு ஏற்றது என ஆயிரக்கணக்கில் நம்மிடம் இருந்துவந்த மருத்துவ குணம்மிக்க நெல் ரகங்கள் காலப்போக்கில் நம்மிடம் இருந்து விலகி சென்ற நிலையில் அதனை மீட்டெடுக்கும் விதமாக திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியில் விதைகளே பேராயுதம் என்ற இளைஞர் அமைப்பினர் இயற்கை விவசாயிகளை இணைத்து நடத்தும் மாபெரும் நெல் திருவிழா இன்று நடைபெற்றது.இந்த நெல் திருவிழாவின் தொடக்கமாக பாரம்பரிய நெல்கோட்டையினை சுமந்து சென்ற மாட்டுவண்டி ஊர்வலத்தை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார். இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர் . விழாவில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விவசாயிகளுக்காக காட்சி படுத்தப்பட்டன.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குவதும் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த ஒன்றுபட்ட தஞ்சை தரணியில் ஆயிரக்கணக்கான பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் குறிப்பாக மருத்துவ குணம்மிக்க நெல் ரகங்களை விவசாயிகள் இயற்கையான உரங்களை பயன்படுத்தி பயிரிட்டு நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் காலத்தின் சூழற்சி வேகத்தில் இயற்கை விவசாயத்தை மறந்த விவசாயிகள் மனித உயிருக்கும் கேடுவிளைவிக்கும் இரசாயண உரங்களை பயன்படுத்தி நெல் உற்பத்தி செய்வதன் விளைவாக இன்றைக்கு மனிதன் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதோடு, மண்வளமும் மாசுபட்டு பேரழிவை நோக்கி நமது சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்கும் விதமாக இனி விதைகளே பேராயுதம் என்ற இளைஞர் அமைப்பு பாரம்பரிய நெல் திருவிழாவினை முன்னெடுத்துள்ளதாக இதன் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். விழாவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.