பழனி உழவர் சந்தை எதிரே காந்தி மார்க்கெட்டுக்கு எதிர்ப்பு:விவசாயிகள் தர்ணா போராட்டம்!
Subscribe தமிழ்நாடு videos
திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காந்தி மார்க்கெட் அமைப்பதற்கு கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் காந்தி மார்க்கெட் கடைகளை பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் வளாகத்தில் உழவர் சந்தை அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலமாக காந்தி மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தை விவசாயிகள் சார்பில் 200 ககும் கடைகள் செயல்படுகிறது. விவசாயிகள் விளைவிற்க்கூடிய காய்கறிகளை கொண்டு வந்து அரசு அதிகாரிகளால் விலை நிர்ணயம் செய்யபட்டு விற்பனை செய்யபடுவதால் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.காந்தி மார்க்கெட்டை உழவர் சந்தை அருகில் அமைத்தால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மார்க்கெட்டை அமைக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே மனு கொடுத்தும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் தற்போது தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று காலை 4 மணிக்கு திறக்க வேண்டிய உழவர் சந்தை தற்போது வரை திறக்கப்படாமல் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உழவர் சந்தை கேட்டை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். மேலும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் பொது ஆணையர் (பொறுப்பு ) உழவர் சந்தையால் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இல்லை என்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தான் வரெவாய் கிடைப்பதாக கூறியதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.