1,000 எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் ஆகுமா?தொண்டர்களுக்கான இயக்கத்தை தொண்டர்களுக்கு பெற்று தர இந்த யுத்தத்தை - விதையை திருச்சியில் இன்று விதைத்துள்ளோம் - கழகத்தின் நிதியை வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் இங்கு பலர் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் - திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓபிஎஸ் பேச்சு...திருச்சி பொன்மலையில் உள்ள ஜி-கார்னர் மைதானத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு ஓபிஎஸ் அணியினர் சார்பில் இன்று நடைபெற்றது.அதிமுக தலைமை கழகம் வடிவில் இந்த மாநாட்டிற்கான மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது - கிட்டத்தட்ட 20,000 அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது - இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளால் மாநாடு நடைபெறும் இடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கவர் நிகழ்வாக அமைந்தது.இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பட்டனர் - மாநாடு நடைபெறும் இடத்தில் நடுமையத்தில் சிகப்பு கம்பளத்தில் ஒ.பி.எஸ் வருகை தரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு கைகளை உயர்த்திக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி ஓபிஎஸ் தொண்டர்கள் வெள்ளத்தில் மேடைக்கு வந்தார் - மேடைக்கு முன்பாக வந்த போது ஜல்லிக்கட்டு காளை அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர் - பின்னர் பிரம்மாண்ட மாலைகளை அணிவித்தும் வீர வாலை பரிசாக அளித்தும் கெளரவித்தனர்.