வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்!
1035 views
Subscribe தமிழ்நாடு videosநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் வடகரையாத்தூரில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கிருந்த அறையில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதில் படுகாயமடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள் அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனைடையே தீ வைக்கப்பட்ட ஆலையில் ஏ.டி.ஜி.பி சங்கர், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட எஸ்.பிக்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி ராஜூ தலைமையில் 3 டி.எஸ்.பி க்கள் என 8 தனிப்படைகள் முதல் கட்டமாக நேற்று அமைக்கப்பட்டது.இன்று கூடுதலாக ஏ.டி.எஸ்.பி க்கள் கனகேஸ்வரி, செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வைக்காக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 டி.எஸ்.பி க்கள் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 800 போலீசார் வரவழைக்கபட்டு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகள், கரும்பு ஆலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஜேடர்பாளையத்தை சுற்றியுள்ள 20 ஆலை கொட்டகைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள ஆலைக்கொட்டைகைகளுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஜேடர்பாளையத்தில் 15 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளே வரும் வாகனங்களையும் வெளியே செல்லும் வாகனகளையும் தீவிர சோதனை செய்தே பிறகே அனுமதித்தனர். இரவு ரோந்து பணிக்கு 20 இருச்சக்கர வாகனங்களும் 4 ஜீப்புகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.