மூக விரோதச் செயல்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்திய நகராட்சி பெண் கவுன்சிலர்!
1051 views
Subscribe தமிழ்நாடு videosமானாமதுரை அக்ரஹாரம் 6வது வார்டு நகராட்சி பகுதிகளில் குற்றச் செயலை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி கேமராவை நகராட்சி பெண் கவுன்சிலர் அமைத்துள்ளது அந்தப் பகுதி வார்டு பொதுமக்களே வரவேற்பை பெற்றுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை6 வது வார்டு பகுதியான அக்ரஹாரம் பகுதி, ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் பகுதி, உட்பட ஆறாவது வார்டு பகுதிகளில் சமூக விரோத செயல்கள் தடுப்பதற்கும் இரவு நேரங்களில் மது போதைகளில் நோட்டமிடும் இளைஞர்கள் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் காவல்துறைக்கு உதவியாக தனது வார்டு பகுதி மக்களுக்காக சொந்த செலவில் ஆறாவது வார்டு நகராட்சி கவுன்சிலரான சண்முகப்பிரியா 5இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார் அதற்கான நிகழ்ச்சி மானாமதுரை அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது சிசிடிவி கேமராவை வைத்திருக்கும் பகுதியை மானாமதுரை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் திறந்து வைத்தார்,சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது அந்த பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது