திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 70 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன!
1274 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட முழுவதும் பரவலாக காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மழையின் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14 சென்டிமீட்டர் மழை பெய்திருந்தது அதிகபட்சமாக நன்னிலத்தில் ஏழு சென்டிமீட்டர் மழையும் மன்னார்குடியில் 3 சென்டிமீட்டர் மழையும் பெய்தது.இந்த நிலையில் மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்தன மின்கம்பிகள் அருந்து விழுந்தன பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன அதிலும் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா விளாகம் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்வெளிகளிலும் தார், சாலைகளிலும் விழுந்தன 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன நூறுக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அந்த ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியிலும் பள்ளியை சுற்றி இருந்த மரங்கள் பள்ளியின் மீது சாய்ந்தன . மேலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து அங்கு களப்பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். விரைந்து பணிகள் நிறைவுற்று மின்சாரம் கொடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்